கோவை: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் சிறப்பு போலீஸாருக்கு போதைப் பொருள் கடத்தி வருவதாக தகவல் வந்தது.
கோவை: கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் சிறப்பு போலீஸாருக்கு போதைப் பொருள் கடத்தி வருவதாக தகவல் வந்தது.
அதைத் தொடர்ந்து, கோவை ரயில் நிலையத்தில் வைத்து நைஜீரிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க இ.சி நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் கடத்திய நைஜீரிய வாலிபரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, மத்திய போதைப் பொருள் தடுப்புப்பிரிவுக்கு கோவை இ.சி. (இன்றியமையாத பண்டகங்கள்) சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் சென்னை மண்டல அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், டெல்லியில் இருந்து கேரளா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் கோவை ரயில் நிலையத்தில் கடந்த 19ஆம் தேதி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ரயில் நிலைய நடைமேடையில் இருந்த நைஜீரிய இளைஞரின் உடைமைகளை மதுரை மண்டல போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சோதனை செய்தனர்.
அப்போது, ரூ.1.10 கோடி மதிப்புள்ள 2.23 கிலோ ‘ஆம்பிடமைன்' என்ற போதைப் பொருளை அவர் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, நைஜீரியாவைச் சேர்ந்த எட்வின் கிங்ஸ்லி(26) என்பவரை என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்தநிலையில், எட்வின் கிங்ஸ்லியை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கோரி மதுரை மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவினர் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள இன்றியமையா பண்டகங்கள் சட்ட வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) கோவிந்தராஜன், நைஜீரிய இளைஞரை மூன்று நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.