ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி- உரிமையாளர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு!

கோவை: ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி செய்த உரிமையாளர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.



கோவை: ஈமு கோழி நிறுவனம் நடத்தி மோசடி செய்த உரிமையாளர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறை மேட்டூரில் ஈமுநிதி நிறுவனம் நடத்தி வந்தவர் செந்தில்நாதன். ஈமு வளர்ப்பு திட்டத்தில் 129 பேர் இடம் 4.3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 2012-ல் கைது செய்யப்பட்டார்.

பிறகு ஜாமீனில் வெளிவந்தவர் கடந்த 5 வருடங்களாகத் தலைமறைவாக இருந்து வருகிறார். தொடர்ந்து இவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஜாமினில் வெளிவந்த செந்தில்நாதன் அதைத் தொடர்ந்து தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமலிருந்து வந்தார். பிறகு தலைமறைவானார்.

அவருக்கு 2016 ஏப்ரலில் பிடிவாரண்டு பிறப்பித்தது. 5 ஆண்டு காலமாக அவர் போலீசில் சிக்க வில்லை. நீண்டகாலம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் செந்தில்நாதன் அறிவிக்கப்பட்ட தேடப்படும் குற்றவாளியாக டான்பிட் கோர்ட்டு உத்தரவிட்டது.

இவரைப் பற்றி தகவல் அறிந்தவர்கள் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்குத் தகவல் அளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...