கோவையில் தண்ணி லாரி ஏற்றி 4-பேர் பலி-ஓட்டுநருக்கு 2 -ஆண்டுகள் தண்டனை!

கோவை: தண்ணி லாரி ஏற்றி 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.


கோவை: தண்ணி லாரி ஏற்றி 4 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

கோவையில் தண்ணீர் லாரி மோதி நான்கு பேர் பலியான வழக்கில், ஓட்டுநருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை நகரிலுள்ள கணபதி, ராமகிருஷ்ணா புரம் மாரப்ப கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 44). கோகுல் வாட்டர் சப்ளை நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றினார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி கணபதி, சங்கனுார் மெயின் ரோட்டில், தண்ணீர் லாரியை ஓட்டி வந்தார். அதிவேகமாக லாரியை ஓட்டியதால், கண்ணப்பன் நகர் பஸ் ஸ்டாபில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது லாரி மோதி, அருகிலிருந்த ஸ்டூடியோவிற்குள் புகுந்தது.

இதில், விஜயா (வயது 37), ஒன்றரை வயது குழந்தை காயத்ரி, பொன்னுசாமி (வயது 38), சுடலை முத்து ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக மத்திய பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து, டிரைவர் ஜெயபால், லாரி உரிமையாளர் சசிகுமார் ஆகியோர் மீது, கோவை குண்டுவெடிப்பு வழக்கு தனிக்கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.

11 ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு, நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாலு, குற்றம் சாட்டப்பட்ட ஜெயபாலுக்கு, இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். லாரி உரிமையாளர் சசிகுமார் விடுதலை செய்யப்பட்டார்.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...