கோவை: கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்கதையாக உள்ளன. இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: கோவையில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் தொடர்கதையாக உள்ளன. இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவையில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்ட பிறகு கேரள மாநிலம் மற்றும் கர்நாடகா மாநில லாட்டரி சீட்டுகள் மறைமுகமாக விற்கப்பட்டு வந்தன. அதன்பிறகு ஒரு நம்பர் லாட்டரி சீட்டு என அதை செயல்படுத்தி வந்தன. இதைத் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக சூதாட்டம் கோவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு சிலர் தங்களுடைய பணங்களை ஆன்லைன் மூலம் பறிகொடுத்து நிராயுதபாணியாய் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு நிலைகுலைந்து நிற்கின்றனர். இந்தநிலையில், தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.
கோவை செல்வபுரம் செட்டி வீதி பகுதியைச் சேர்ந்த கருப்பு ராஜ் என்பவரின் மகன் கார்த்திக்(36). இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளார். கார்த்திக் மொத்த காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகளை வாங்கி ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் அடிக்கடி ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இப்படி ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் சில லட்ச ரூபாயை கார்த்திக் இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் கார்த்திக் இருந்து வந்துள்ளார். இதை அடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி திவ்யா செல்வபுரம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்ட பிறகு கேரள மாநிலம் மற்றும் கர்நாடகா மாநில லாட்டரி சீட்டுகள் மறைமுகமாக விற்கப்பட்டு வந்தன. அதன்பிறகு ஒரு நம்பர் லாட்டரி சீட்டு என அதை செயல்படுத்தி வந்தன. இதைத் தொடர்ந்து ஆன்லைன் மூலமாக சூதாட்டம் கோவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதில் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒரு சிலர் தங்களுடைய பணங்களை ஆன்லைன் மூலம் பறிகொடுத்து நிராயுதபாணியாய் குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு நிலைகுலைந்து நிற்கின்றனர். இந்தநிலையில், தொடர்ந்து தற்கொலை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்த வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.
கோவை செல்வபுரம் செட்டி வீதி பகுதியைச் சேர்ந்த கருப்பு ராஜ் என்பவரின் மகன் கார்த்திக்(36). இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளார். கார்த்திக் மொத்த காய்கறி மார்க்கெட்டிற்கு சென்று காய்கறிகளை வாங்கி ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் அடிக்கடி ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். இப்படி ஆன்லைன் மூலம் சூதாட்டத்தில் சில லட்ச ரூபாயை கார்த்திக் இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் கார்த்திக் இருந்து வந்துள்ளார். இதை அடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி திவ்யா செல்வபுரம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.