கோவை: கேரளாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கிணத்துக்கடவு தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. வாகனப் பரிசோதனியின்போது, இ-பாஸ் இல்லாமல் வந்தவர்களை காவல் துறையினர் திருப்பி அனுப்பினர்.
கோவை: கேரளாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கிணத்துக்கடவு தமிழக கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. வாகனப் பரிசோதனியின்போது, இ-பாஸ் இல்லாமல் வந்தவர்களை காவல் துறையினர் திருப்பி அனுப்பினர்.
கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து காணப்படுவதால், கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், கோவை மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அருகே உள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதியான வீரப்பகவுண்டனூர் காவல் துறை சோதனைச் சாவடியில் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா கண்காணிப்பு பணியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கேரள பகுதியிலிருந்து தமிழகத்திற்கு இ-பாஸ் இல்லாமல் வந்தால், வாகனங்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதன் அடிப்படையில் கேரளா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த வாகனங்களை காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, வாகனங்களில் வந்தவர்களுக்கு உடல் வெப்பம் மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்த பின்னரே அனுமதித்தனர். அதேந்நேரம், இ-பாஸ் இல்லாமல் வாகனங்களில் வந்தவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.
கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து காணப்படுவதால், கேரளாவிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால், கோவை மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லைப் பகுதியில் வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் மருத்துவக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு அருகே உள்ள தமிழக-கேரள எல்லைப் பகுதியான வீரப்பகவுண்டனூர் காவல் துறை சோதனைச் சாவடியில் வருவாய்த் துறை மற்றும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா கண்காணிப்பு பணியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கேரள பகுதியிலிருந்து தமிழகத்திற்கு இ-பாஸ் இல்லாமல் வந்தால், வாகனங்களைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதன் அடிப்படையில் கேரளா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த வாகனங்களை காவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, வாகனங்களில் வந்தவர்களுக்கு உடல் வெப்பம் மற்றும் ஆக்சிஜன் அளவு பரிசோதனை செய்த பின்னரே அனுமதித்தனர். அதேந்நேரம், இ-பாஸ் இல்லாமல் வாகனங்களில் வந்தவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்பினர்.