வால்பாறையில் காவல்துறை வியாபாரிகள் ஆலோசனை கூட்டம்..!

கோவை: கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகள் குறித்து, வால்பாறையில் காவல்துறை வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கோவை: கொரோனா பெருந்தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகள் குறித்து, வால்பாறையில் காவல்துறை வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறையில் காவல்துறை வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமை தாங்கினார். கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி மளிகை, காய்கறி, பால் மற்றும் மருந்தகங்கள் காலை 6 மணி முதல் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.



மேலும், மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடிக்க அனைத்து துறைகளும் கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வால்பாறையில் உள்ள வியாபாரிகள் அரசு அறிவித்துள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். கடைக்கு வரும் வாகனங்களில் இருந்து சரக்குகளைக் குறிப்பிட்ட நேரத்தில் இறக்கி ஏற்ற வேண்டும் என்று காவல்துறை ஆய்வாளர் கற்பகம் வியாபாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், முகக் கவசம் அணிதல் தனிமனித இடைவெளி கடைப்பிடித்தல் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். இக்கூட்டத்தில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம், உதவி ஆய்வாளர், காவலர்கள் மற்றும் வியாபாரிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....