கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் காந்திபுரம் பகுதியில் ஒரு மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இருந்தார். இதுகுறித்து நடை பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டனர். அவர் காக்கி கலர் யூனிபார்ம் அணிந்து இருந்தார். அவருடைய அடையாள அட்டையில் ஆனந்தகுமார் என பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர் ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரியவந்தது.
மேலும், அவர் தன்னுடைய பேன்ட் பையில் கடன் தொல்லை அதிகமான காரணத்தால் என்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடனிலிருந்து மீள முடியாத நிலையால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்ற உருக்கமான கடிதம் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அதிகாலை சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் காந்திபுரம் பகுதியில் ஒரு மரத்தில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இருந்தார். இதுகுறித்து நடை பயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து, தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், அவரது உடலை மீட்டனர். அவர் காக்கி கலர் யூனிபார்ம் அணிந்து இருந்தார். அவருடைய அடையாள அட்டையில் ஆனந்தகுமார் என பெயர் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர் ஆட்டோ ஓட்டுநர் என்பது தெரியவந்தது.
மேலும், அவர் தன்னுடைய பேன்ட் பையில் கடன் தொல்லை அதிகமான காரணத்தால் என்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடனிலிருந்து மீள முடியாத நிலையால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்ற உருக்கமான கடிதம் கிடைத்தது.
இதையடுத்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த அதிகாலை சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.