கோவை: கோவையில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை: கோவையில் கஞ்சா வியாபாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை சாய்பாபா காலனி போலீசாருக்கு பி.என். புதூர் பகுதியில் கஞ்சா விற்றதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது, அவர்களிடம் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் திடியலூரில் சேர்ந்த பிரகாஷ் (54) மற்றும் மதுரையைச் சேர்ந்த ஜெயவீரன் (53) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் கஞ்சா வியாபாரிகள் இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை சாய்பாபா காலனி போலீசாருக்கு பி.என். புதூர் பகுதியில் கஞ்சா விற்றதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது, அவர்களிடம் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் திடியலூரில் சேர்ந்த பிரகாஷ் (54) மற்றும் மதுரையைச் சேர்ந்த ஜெயவீரன் (53) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் கஞ்சா வியாபாரிகள் இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.