கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று 02.08.2021 நடைபெறுகிறது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இன்று 02.08.2021 நடைபெறுகிறது.
இதில் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோவிஷீல்டு 180 பேருக்கும், கோவாக்சின் 214 பேருக்கும், சோலையார் நகர் ஆரம்ப சுகாதார நிலையம் கோவிஷீல்டு 120, முடீஸ் ஆரம்ப சுகாதார நிலையம் கோவிஷீல்டு 120, தேயிலை தோட்ட பகுதிகளில் டாடா எஸ்டேட் கோவாக்சின் 240, அய்யர் பாடி கோவாக்சின் 144, வுட் பிரையர் கோவாக்சின் 180, பெரிய கருமலை கோவாக்சின் 120, பிபிடிசி கோவாக்சின் 240, வாட்டர் பால் கோவாக்சின் 180, சேக்கல் முடி கோவாக்சின் 144 டான் டீ கோவிஷீல்டு 60, ரொட்டிக்கடை மேல்நிலைப்பள்ளி கோவிஷீல்டு 36, சக்தி/தலநார் கோவிஷீல்டு 24 என மொத்தம் 550 பேருக்கு கோவிஷீல்டு முதல் தடவை மற்றும் இரண்டாம் தடவை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இந்த முகாமில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மேலும் 1,462 நபர்களுக்கு கோவாக்ஸின் தடுப்பூசி இரண்டாவது கட்டம் போடுபவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.
கோவிஷீல்டு 84 நாட்கள், கோவாக்சின் 28 நாட்கள் கடந்தவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்படுகிறது.