கோவை: வால்பாறை மற்றும் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களைச் சுற்றிலும் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கருதி வனத்துறையின் சார்பாக வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
கோவை: வால்பாறை மற்றும் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களைச் சுற்றிலும் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கருதி வனத்துறையின் சார்பாக வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
‘‘கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களைச் சுற்றிலும் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நாம் வனங்களுக்கு நடுவில்தான் வாழ்ந்து வருகிறோம் என்பதை அனுதினம் உணர்ந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். வனங்களையும், வன உயிரினங்களையும் சார்ந்தே வாழந்து வருகிறோம். எனவே, தற்போது சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகாலை 5 மணிக்கு மேலும் காலை 7 மணி வரையும், மாலை 5 மணிக்கு மேலும் இரவு நேரங்களிலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதையும், தனியாக நடமாடுவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், தேயிலைத் தோட்டங்களின் நடுவேதான் நாம் குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறோம். இப்பகுதியில் நாம் உணவு கழிவுகளையும் மாமிச கழிவுகளையும் வீசி விடுகிறோம். அதோடு மட்டுமல்லாமல் ஆடு, பசு, கோழி, நாய், என வளர்த்து வருகிறோம். அவைகளும் வனவிலங்குகளை ஊருக்குள்ளும் நகரப் பகுதிகளுக்குள்ளும் வர வைக்கின்றன. எனவே, வீட்டு விலங்குகளை வளர்ப்பதை தவிர்த்தால், வனவிலங்குகள் வீடு தேடி வருவதைத் தவிர்த்து, நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இயலும் என அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, அங்கே நம் சிறிய குழந்தைகளை தனியாக வெளியே செல்வதையும், விளையாட விடுவதையும் தயவுகூர்ந்து தவிர்த்து பாதுகாப்புடன் இருக்கும்படி வனத்துறையின் சார்பில் பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். வீடுகளைச் சுற்றிலும் புதர்கள் மண்டியிருப்பதை அகற்றி வெளிச்சத்தோடு இருக்கும்படி வைத்துக் கொள்ளவும்.
சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளைப் பார்க்கும் ஆவலில் அவைகளை உணவு உண்ணவிடாமல் தொந்தரவு செய்வதும், அருகே சென்று புகைப்படங்கள் எடுப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் தேவையில்லாமல் நடந்து சென்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் வெளியே வனவிலங்குகளைக் காணச் செல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அதை சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் உறுதி செய்து கொண்டு வனத்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அத்தியாவசியத் தேவைக்காக வெளியே வரும்போது கையில் தடியும், டார்ச் லைட்டையும் மறக்காமல் எடுத்துச்செல்லவும். அவை உங்களைப் பாதுகாப்பதில் உதவியாக இருக்கும்'' என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
‘‘கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களைச் சுற்றிலும் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. நாம் வனங்களுக்கு நடுவில்தான் வாழ்ந்து வருகிறோம் என்பதை அனுதினம் உணர்ந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். வனங்களையும், வன உயிரினங்களையும் சார்ந்தே வாழந்து வருகிறோம். எனவே, தற்போது சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகாலை 5 மணிக்கு மேலும் காலை 7 மணி வரையும், மாலை 5 மணிக்கு மேலும் இரவு நேரங்களிலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுவதையும், தனியாக நடமாடுவதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும், தேயிலைத் தோட்டங்களின் நடுவேதான் நாம் குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறோம். இப்பகுதியில் நாம் உணவு கழிவுகளையும் மாமிச கழிவுகளையும் வீசி விடுகிறோம். அதோடு மட்டுமல்லாமல் ஆடு, பசு, கோழி, நாய், என வளர்த்து வருகிறோம். அவைகளும் வனவிலங்குகளை ஊருக்குள்ளும் நகரப் பகுதிகளுக்குள்ளும் வர வைக்கின்றன. எனவே, வீட்டு விலங்குகளை வளர்ப்பதை தவிர்த்தால், வனவிலங்குகள் வீடு தேடி வருவதைத் தவிர்த்து, நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இயலும் என அன்புடன் கேட்டுக்கொள்வதோடு, அங்கே நம் சிறிய குழந்தைகளை தனியாக வெளியே செல்வதையும், விளையாட விடுவதையும் தயவுகூர்ந்து தவிர்த்து பாதுகாப்புடன் இருக்கும்படி வனத்துறையின் சார்பில் பணிவோடு கேட்டுக் கொள்கிறோம். வீடுகளைச் சுற்றிலும் புதர்கள் மண்டியிருப்பதை அகற்றி வெளிச்சத்தோடு இருக்கும்படி வைத்துக் கொள்ளவும்.
சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளைப் பார்க்கும் ஆவலில் அவைகளை உணவு உண்ணவிடாமல் தொந்தரவு செய்வதும், அருகே சென்று புகைப்படங்கள் எடுப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும், வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் தேவையில்லாமல் நடந்து சென்று வேடிக்கை பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகள் வெளியே வனவிலங்குகளைக் காணச் செல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். அதை சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள் உறுதி செய்து கொண்டு வனத்துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அத்தியாவசியத் தேவைக்காக வெளியே வரும்போது கையில் தடியும், டார்ச் லைட்டையும் மறக்காமல் எடுத்துச்செல்லவும். அவை உங்களைப் பாதுகாப்பதில் உதவியாக இருக்கும்'' என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.