கோவை அருகே நில உரிமையாளர் தீண்டாமை சுவர் அமைத்து பொது வழி அடைப்பு..!

கோவை: கோவை மாவட்டம் பன்னிமடை ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் தீண்டாமைச் சுவர் எழுப்பி பொது வழியை அடைத்துள்ளதை அகற்றக் கோரி புகார் எழுந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பன்னிமடை ஊராட்சியில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் தீண்டாமைச் சுவர் எழுப்பி பொது வழியை அடைத்துள்ளதை அகற்றக் கோரி புகார் எழுந்துள்ளது.

கோவை பன்னிமடை ஊராட்சியில் கண்ணபிரான் நகர், கொண்டசாமி நகர் அமைந்திருக்கின்றன. கொண்டசாமி நகரில் அருந்ததியர்கள் 150 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் தாழ்த்தப்பட்ட்ட பொதுமக்கள் வசிப்பதனால், கண்ணபிரான் நகரில் வீட்டு மனைகள் விற்கப்படாதென நினைத்து அதன் உரிமையாளர்கள் கொண்டசாமி நகர் வாசிகள் தெரியாதவாறு தீண்டாமை சுவர் கட்டியதாக கொண்டசாமி நகர் பொதுமக்கள் புகார் தந்தனர். குறிப்பாக, கொண்டசாமி நகரின் பொதுமக்களுக்கான பொது வழிப்பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் இரண்டு கிலோ மீட்டர் சுற்றிச் செல்கின்றனர்.



கொண்டசாமி நகரில் வசிக்கின்ற அருந்ததிய, தாழ்த்தப்பட்ட கிராமத்து பொது மக்கள், பத்தடி நீள சுவர் கட்டப்பட்டிருக்கின்ற நிலையில் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே, அதனை அகற்ற வேண்டி கோரிக்கையை முன் வைத்து இருக்கின்றனர்.



இந்த சுவர் குடியிருப்பு பொதுமக்களின் பாதுகாப்புக்காக கட்டியதாக முரணான பதிலை அந்த வீட்டு மனையை விற்றவர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இந்த சுவரை அகற்ற த.பெ.தி.கவினர் கலெக்டரிடம் புகார் தந்தனர்.

இதனையடுத்து ஊராட்சி நிர்வாகம் தீண்டாமை சுவரை இடிக்க நடவடிக்கை மேற்க்கொண்டுள்ளதாக ஊராட்சித் தலைவர் தெரிவித்திருக்கின்றார். பன்னிமடைக்கு பயணிக்கின்ற பாதை அடைக்கப்பட்டு, ஆபத்தாக கட்டப்பட்டிருந்த தீண்டாமை சுவர் இடிக்கப்படுவதனால் பட்டியல் சமூதாய மக்கள் மீது காட்டப்பட்ட பாரபட்சம் முடிவுக்குள்ளாகியிருக்கின்றன.

Newsletter

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...