கோவை: கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடங்கியுள்ள நிலையில், வால்பாறை பகுதிக்கு வெளியாட்கள் வர சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.
கோவை: கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடங்கியுள்ள நிலையில், வால்பாறை பகுதிக்கு வெளியாட்கள் வர சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் வெளியாட்கள் வருவதற்கு தடை விதித்து சுகாதாரத்துறை நடவடிக்கையை எடுத்துள்ளது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அட்டகட்டி ஆழியார் மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் தீவிரப்படுத்தப்படுகின்றன.
வால்பாறை நகரில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடு மலைச்சாலை, காமராஜ் நகர், ஸ்டேன் மோர் சாலை, முடீஸ் சாலைகளில் சோதனைச் சாவடிகள் மீண்டும் திறக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினர் நகராட்சி வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் பங்கு பெறுவர். மேலும், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிக்க நான்கு துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்கும் என்று வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் மூன்றாம் அலை தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் வெளியாட்கள் வருவதற்கு தடை விதித்து சுகாதாரத்துறை நடவடிக்கையை எடுத்துள்ளது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து அட்டகட்டி ஆழியார் மழுக்குப்பாறை சோதனைச் சாவடியில் தீவிரப்படுத்தப்படுகின்றன.
வால்பாறை நகரில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடு மலைச்சாலை, காமராஜ் நகர், ஸ்டேன் மோர் சாலை, முடீஸ் சாலைகளில் சோதனைச் சாவடிகள் மீண்டும் திறக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினர் நகராட்சி வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் பங்கு பெறுவர். மேலும், அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிக்க நான்கு துறையினரும் இணைந்து நடவடிக்கை எடுக்கும் என்று வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் தெரிவித்துள்ளார்.