பொள்ளாச்சியில் இரு சக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்த நபர் கைது!

கோவை: பொள்ளாச்சியில் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்து வந்த நபரைக் கிழக்கு காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்து வந்த நபரைக் கிழக்கு காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

பொள்ளாச்சி கோட்டூர் ரோடு மேம்பாலம் அருகே நேற்று, கிழக்கு காவல் நிலைய காவல்துறை வாகன தணிக்கை மேற்கொண்டு வந்தனர். அப்போது சந்தேகத்திற்குறிய வகையில் வந்த நபரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தார்.

இதையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் (39) என்பதும், இவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட நகர்ப்பகுதிகளில், இரு சக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடம் இருந்து மூன்று இரு சக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்த, கிழக்கு காவல் நிலைய காவல்துறை, அவர் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...