கோவை: கோவையில் முந்திரி பருப்பு இறக்குமதி செய்து நூதனமான முறையில் 1லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த அக்கா தம்பி இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவையில் முந்திரி பருப்பு இறக்குமதி செய்து நூதனமான முறையில் 1லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த அக்கா தம்பி இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் இருந்து பருப்பு வியாபாரம் செய்வதாகக் கூறி சென்னையில் உள்ள மொத்த விற்பனைக் கடைக்கு தகவல் அளித்து 180 கிலோ முந்திரி பருப்பை பார்சலில் பெற்றுக்கொண்டு போலியான முகவரி கொடுத்து ஏமாற்றிய அக்கா, தம்பி இருவரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து என்பவரின் மகன் ஆரோக்கிய ஆனந்த பாஸ்கர். இவர் சென்னையில் முந்திரிப் பருப்பு மற்றும் எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகள் மஞ்சுளா(29) மற்றும் அவரது சகோதரர் விவேக்(28) ஆகிய இருவரும் தாங்கள் தொண்டாமுத்தூர் அடுத்த பூலுவபட்டி பகுதிகள் நட்ஸ் வேர்ல்டு என்ற பெயரில் கடை நடத்தி வருவதாகவும் தங்களது நிறுவனத்திற்கு 180 கிலோ முந்திரிப்பருப்பு வேண்டும் என்றும் ஆர்டர் கொடுத்தனர். இதையடுத்து, ஆரோக்கிய ஆனந்த பாஸ்கர் 180 கிலோ முந்திரி பருப்பு மூட்டைகளை டிராவல்ஸ் மூலம் கோவைக்கு அனுப்பி வைத்தார். பார்சல் மூலம் வந்த முந்திரிப் பருப்பு மூட்டைகளை மோசடியான ஆவணங்கள் மூலம் வேறு முகவரிக்கு மஞ்சுளாவும் விவேக்கும் எடுத்துச் சென்றதாகப் புகார் எழுந்தது.
மேலும், முந்திரிப் பருப்பு வரவில்லை என்று கூறி உள்ளனர். இதையடுத்து ஆரோக்கிய ஆனந்த பாஸ்கர் கோவை ரத்தினபுரி போலீஸில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகள் மஞ்சுளா(29) மற்றும் அவரது சகோதரர் விவேக்(28) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவையில் இருந்து பருப்பு வியாபாரம் செய்வதாகக் கூறி சென்னையில் உள்ள மொத்த விற்பனைக் கடைக்கு தகவல் அளித்து 180 கிலோ முந்திரி பருப்பை பார்சலில் பெற்றுக்கொண்டு போலியான முகவரி கொடுத்து ஏமாற்றிய அக்கா, தம்பி இருவரும் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சவரிமுத்து என்பவரின் மகன் ஆரோக்கிய ஆனந்த பாஸ்கர். இவர் சென்னையில் முந்திரிப் பருப்பு மற்றும் எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகள் மஞ்சுளா(29) மற்றும் அவரது சகோதரர் விவேக்(28) ஆகிய இருவரும் தாங்கள் தொண்டாமுத்தூர் அடுத்த பூலுவபட்டி பகுதிகள் நட்ஸ் வேர்ல்டு என்ற பெயரில் கடை நடத்தி வருவதாகவும் தங்களது நிறுவனத்திற்கு 180 கிலோ முந்திரிப்பருப்பு வேண்டும் என்றும் ஆர்டர் கொடுத்தனர். இதையடுத்து, ஆரோக்கிய ஆனந்த பாஸ்கர் 180 கிலோ முந்திரி பருப்பு மூட்டைகளை டிராவல்ஸ் மூலம் கோவைக்கு அனுப்பி வைத்தார். பார்சல் மூலம் வந்த முந்திரிப் பருப்பு மூட்டைகளை மோசடியான ஆவணங்கள் மூலம் வேறு முகவரிக்கு மஞ்சுளாவும் விவேக்கும் எடுத்துச் சென்றதாகப் புகார் எழுந்தது.
மேலும், முந்திரிப் பருப்பு வரவில்லை என்று கூறி உள்ளனர். இதையடுத்து ஆரோக்கிய ஆனந்த பாஸ்கர் கோவை ரத்தினபுரி போலீஸில் இதுகுறித்து புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சரவணம்பட்டி விசுவாசபுரம் பகுதியைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவரின் மகள் மஞ்சுளா(29) மற்றும் அவரது சகோதரர் விவேக்(28) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.