கோவை: கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தென்னை நார் கருகி நாசமானது.
கோவை: கிணத்துக்கடவு அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான தென்னை நார் கருகி நாசமானது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள முஸ்லிம் கோவில்பாளையத்தில் செந்தில் அரசு என்பவருக்கு சொந்தமான தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில் இன்று மதியம் தென்னை நார் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் மின்சார கம்பி மீது தென்னை மரம் உடைந்து விழுந்ததில் அதில் ஏற்பட்ட தீப்பொறியால் தென்னை நாரில் தீ பற்றி எரிய தொடங்கியது.

இதையடுத்து, தீ எரிவதை கண்டு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், காற்று பலமாக வீசியதால் அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நாரிலும் பற்றி எரியத் தொடங்கியது.
பின்னர், பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 3 மணி நேரம் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காற்று அதிகமாக வீசுவதால் தென்னை நார்களில் ஏற்பட்ட தீயிலிருந்து புகைமூட்டம் அதிகளவு இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு காவல் துறையினர், தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள முஸ்லிம் கோவில்பாளையத்தில் செந்தில் அரசு என்பவருக்கு சொந்தமான தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது.
இந்த தொழிற்சாலையில் இன்று மதியம் தென்னை நார் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் மின்சார கம்பி மீது தென்னை மரம் உடைந்து விழுந்ததில் அதில் ஏற்பட்ட தீப்பொறியால் தென்னை நாரில் தீ பற்றி எரிய தொடங்கியது.
இதையடுத்து, தீ எரிவதை கண்டு தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால், காற்று பலமாக வீசியதால் அருகில் குவித்து வைக்கப்பட்டிருந்த தென்னை நாரிலும் பற்றி எரியத் தொடங்கியது.
பின்னர், பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் 3 மணி நேரம் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காற்று அதிகமாக வீசுவதால் தென்னை நார்களில் ஏற்பட்ட தீயிலிருந்து புகைமூட்டம் அதிகளவு இருந்ததால் மூச்சுத்திணறல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு காவல் துறையினர், தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.