கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்களும் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் காப்பித் தோட்டங்களும் உள்ளன.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் தேயிலைத் தோட்டங்களும் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் காப்பித் தோட்டங்களும் உள்ளன.
கடந்த மாதம் காப்பித் தோட்டங்களில் தென்மேற்குப் பருவமழை துவங்குவதற்கு முன் பூக்கள் உண்டாகி காய்களாக மாறின.மேலும் காப்பித் தோட்ட நிர்வாகங்களும் காப்பி செடிகளுக்குத் தேவையான உரங்கள் மருந்துகளை அடித்துப் பராமரித்து வந்தன.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு மாத காலமாகத் தொடங்கிப் பெய்து வந்த காரணத்தினால் காப்பி செடியில் உள்ள காய்கள் அனைத்தும் நன்கு முற்றி வளர்ந்துள்ளன.
இதன் காரணமாக இந்த ஆண்டு காபி செடியில் அதிகப் படியான பழங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு உரம் போடுதல் மருந்து அடித்தல் கிளை ஒடித்தல் போன்ற ஏராளமான பணிகள் கிடைப்பதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த மாதம் காப்பித் தோட்டங்களில் தென்மேற்குப் பருவமழை துவங்குவதற்கு முன் பூக்கள் உண்டாகி காய்களாக மாறின.மேலும் காப்பித் தோட்ட நிர்வாகங்களும் காப்பி செடிகளுக்குத் தேவையான உரங்கள் மருந்துகளை அடித்துப் பராமரித்து வந்தன.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு மாத காலமாகத் தொடங்கிப் பெய்து வந்த காரணத்தினால் காப்பி செடியில் உள்ள காய்கள் அனைத்தும் நன்கு முற்றி வளர்ந்துள்ளன.
இதன் காரணமாக இந்த ஆண்டு காபி செடியில் அதிகப் படியான பழங்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு உரம் போடுதல் மருந்து அடித்தல் கிளை ஒடித்தல் போன்ற ஏராளமான பணிகள் கிடைப்பதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.