கோவை: கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பொள்ளாச்சியை அடுத்த தமிழக கேரள எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பொள்ளாச்சியை அடுத்த தமிழக கேரள எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளா மாநிலத்தில் தினசரி கொரோனா பெருந்தொற்று பாதிப்பு என்பது 20 ஆயிரத்தை கடந்து விட்டது. இந்தநிலையில், தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக, கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கோவிந்தாபுரம், கோபாலபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகள் உள்ளன.
அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இ-பதிவு உள்ள வாகனங்களை மட்டுமே தமிழகத்தில் அனுமதித்து வருகின்றனர்.
அதேபோல் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு கேரள மாநிலத்தில் இருந்து வருபவர்களை உடல் வெப்ப பரிசோதனை செய்து உரிய ஆவணங்கள் கொண்டுவந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவதால், இரு மாநிலப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மாநில எல்லைகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கேரளா மாநிலத்தில் தினசரி கொரோனா பெருந்தொற்று பாதிப்பு என்பது 20 ஆயிரத்தை கடந்து விட்டது. இந்தநிலையில், தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
குறிப்பாக, கேரளாவை ஒட்டியுள்ள கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கோவிந்தாபுரம், கோபாலபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 13 சோதனைச் சாவடிகள் உள்ளன.
அனைத்து சோதனைச் சாவடிகளிலும் போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இ-பதிவு உள்ள வாகனங்களை மட்டுமே தமிழகத்தில் அனுமதித்து வருகின்றனர்.
அதேபோல் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு கேரள மாநிலத்தில் இருந்து வருபவர்களை உடல் வெப்ப பரிசோதனை செய்து உரிய ஆவணங்கள் கொண்டுவந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவதால், இரு மாநிலப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மாநில எல்லைகளில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.