கோவையில் பிரியாணியில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டல்; ரூ.1.4 கோடி மோசடி

கோவை: கோவையில் ஒரு பெண்ணிடம் சேர்ந்து தொழில் தொடங்கலாம் என 1.4 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தது. அவர் வீட்டிற்குச் சென்று பிரியாணியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து. அவரை கற்பழித்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவையில் ஒரு பெண்ணிடம் சேர்ந்து தொழில் தொடங்கலாம் என 1.4 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தது. அவர் வீட்டிற்குச் சென்று பிரியாணியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து. அவரை கற்பழித்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் முதல்வரின் தனிப்பரிவு மற்றும் கோவை மாநகர காவல் துறை ஆணையருக்கு மனு ஒன்றை அளித்துள்ளார். இந்தநிலையில், தாம் ஏமாற்றபட்டுள்ளதால் நீதி கிடைக்க மனு வழங்கியுள்ளதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘பல்லடம் சுக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயராம் என்பவரின் மகனான ஜெயகாந்தன், விசைத்தறி தொழிலில் முதலீடு செய்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என கூறி என்னிடம் இரண்டு தவணைகளாக ரூபாய் ஒரு கோடியே நாற்பது இலட்சம் ரூபாய் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து எனது வீட்டிற்கு வந்த ஜெயகாந்தன் பிரியாணியில் மயக்க மருந்து கலந்து என்னிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதோடு அதனை வீடியோ மற்றும் படங்கள் எடுத்து மிரட்டு வருகிறார். மேலும், எனது பணத்தைத் திரும்பக் கேட்டபோது, என்னுடைய ஆபாச வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன் என அவருடைய நண்பர் நடராஜனுடன் சேர்ந்து மிரட்டுகிறார்'' என்று தெரிவித்தார். மேலும், இதுபோன்று பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கும் ஜெயகாந்தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். பெண்களுக்கு எதிராக கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பணம் மோசடி பாலியல் தொந்தரவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. இவை மேலும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

Newsletter

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...

சித்தாபுதூர் கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியல் உடைத்து திருட்டு

கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோவிலில் இரண்டாவது முறையாக உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச...

டாஸ்மாக் முறைகேடு: கோவையில் நான்கு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வரும...

வெள்ளப்பெருக்கு: கோவை குற்றாலம் அருவி தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கோவை குற்றாலம் அருவிக்...

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...