கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முகாமில் 4394 கற்போர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முகாமில் 4394 கற்போர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பில் கோவை மாவட்டத்தில் 15 வட்டார வள மையத்தில் 610 மையங்களில் இந்த கல்வியாண்டிற்கான முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இதில் கல்வி பயிலாத 12 ஆயிரத்து 158 பேருக்கு கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் 29ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த முகாம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த மூன்று நாட்களும் பள்ளிகள், பணிபுரியுமிடம், குடியிருப்பு பகுதிகள் என பல்வேறு இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. இதனிடையே நேற்று நடைபெற்ற முகாமில் 4394 கற்போர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இம்மதிப்பீட்டு முகாம்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில் அதிக அளவில் முதியோர்கள் கலந்து கொண்டு தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு எழுத, படிக்கப் போன்ற அடிப்படை கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது.
கற்போம் எழுதுவோம் இயக்கம் சார்பில் கோவை மாவட்டத்தில் 15 வட்டார வள மையத்தில் 610 மையங்களில் இந்த கல்வியாண்டிற்கான முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இதில் கல்வி பயிலாத 12 ஆயிரத்து 158 பேருக்கு கற்போருக்கான மதிப்பீட்டு முகாம் 29ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த முகாம் வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த மூன்று நாட்களும் பள்ளிகள், பணிபுரியுமிடம், குடியிருப்பு பகுதிகள் என பல்வேறு இடங்களில் முகாம்கள் நடைபெறுகிறது. இதனிடையே நேற்று நடைபெற்ற முகாமில் 4394 கற்போர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இம்மதிப்பீட்டு முகாம்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர்கள், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் அதிக அளவில் முதியோர்கள் கலந்து கொண்டு தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு எழுத, படிக்கப் போன்ற அடிப்படை கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது.