கோவை: கோவை காந்திபுரம் மேம்பாலத்தில், ஆபத்தை உணராமல் செல்போனில் சீரியல் பார்த்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
கோவை: கோவை காந்திபுரம் மேம்பாலத்தில், ஆபத்தை உணராமல் செல்போனில் சீரியல் பார்த்தபடி இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
செல்போனில் பேசியபடி வாகனங்களை இயக்குவதால் எண்ணற்ற விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தாலும், வாகனம் ஓட்டும் போது செல்போனை பயன்படுத்துவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது என்பதே நிதர்சனம்.
இதற்கும் ஒருபடி மேலாக, கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் வாகன ஓட்டி ஒருவர் ஜாலியாக தனது செல்போனில் சீரியல் பார்த்து ரசித்தபடி இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கும் மனதை பதபதைக்க வைக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
யார் எந்த நபர்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.