கோவை: கோவை அருகே இன்று காலை அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடி வெள்ளி சிறப்பு பூஜையின் போது, திடீரென எங்கிருந்தோ வந்த கிளி பறந்து வந்து அம்மனின் மடியில் அமர்ந்த சம்பவம், பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
கோவை: கோவை அருகே இன்று காலை அம்மன் கோவிலில் நடைபெற்ற ஆடி வெள்ளி சிறப்பு பூஜையின் போது, திடீரென எங்கிருந்தோ வந்த கிளி பறந்து வந்து அம்மனின் மடியில் அமர்ந்த சம்பவம், பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
கோவை இருகூர் மாசாணியம்மன் கோவிலில் இன்று காலை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, பக்தர்கள் அனைவரும் பயபக்தியுடன் அம்மனை தரிசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு கிளி திடீரென பறந்து வந்து அம்மனுடைய மடியில் அமர்ந்து அங்குமிங்குமாக பார்த்துக் கொண்டிருந்தது. இதை பார்த்த பக்தர்கள் கைகளைக் கூப்பி அம்மனை பரவசத்துடன் தரிசிக்க தொடங்கினர்.
இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.