கோவை: காஞ்சிபுரத்தில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர்.
கோவை: காஞ்சிபுரத்தில் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை நீதிமன்றத்தில் இருவர் சரணடைந்தனர்.
காஞ்சிபுரம், பல்லவர் மேடு வ.உ.சி., நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் (42). இவரது சகோதரர் ரகுவரன் அதே பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் மகன் நாராயணமூர்த்தியை கடந்த, 2012ல் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், ரகுவரன் தலைமறைவானார்.
இந்நிலையில், ரகுவரன் தந்தை நடராஜன் கடந்த 25ம் தேதி இறந்ததை கேள்விப்பட்டு ஊருக்கு வந்தார். இத்தகவலை அறிந்த சுகுமார், எட்டு பேர் கும்பலுடன் சென்று, செந்தில்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். அங்கிருந்த ரகுவரனை வெட்டி கொல்ல முயன்றபோது தப்பி ஓட்டம் பிடித்தார்.
அப்போது, அவர்களை செந்தில்குமார் தடுத்தபோது, அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பினர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் போலீசார், 8 பேர் கொண்ட கும்பலை தேடி வந்தனர். இதில், பிரபாகரன் (30), சதீஷ்குமார் (23), கோவை ஜே.எம்:5 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் அப்துல்ரகுமான் உத்தரவிட்டார்.
காஞ்சிபுரம், பல்லவர் மேடு வ.உ.சி., நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் (42). இவரது சகோதரர் ரகுவரன் அதே பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் மகன் நாராயணமூர்த்தியை கடந்த, 2012ல் வெட்டி கொலை செய்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், ரகுவரன் தலைமறைவானார்.
இந்நிலையில், ரகுவரன் தந்தை நடராஜன் கடந்த 25ம் தேதி இறந்ததை கேள்விப்பட்டு ஊருக்கு வந்தார். இத்தகவலை அறிந்த சுகுமார், எட்டு பேர் கும்பலுடன் சென்று, செந்தில்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். அங்கிருந்த ரகுவரனை வெட்டி கொல்ல முயன்றபோது தப்பி ஓட்டம் பிடித்தார்.
அப்போது, அவர்களை செந்தில்குமார் தடுத்தபோது, அவரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பினர்.
இதையடுத்து, காஞ்சிபுரம் போலீசார், 8 பேர் கொண்ட கும்பலை தேடி வந்தனர். இதில், பிரபாகரன் (30), சதீஷ்குமார் (23), கோவை ஜே.எம்:5 நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தனர். அவர்களை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் அப்துல்ரகுமான் உத்தரவிட்டார்.