கோவை: கோவை மாவட்ட காவல் துறை சார்பாக கோவையில் பல்வேறு இடங்களில் சிறப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 3 வாலிபர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா 4 செல்போன் 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாவட்ட காவல் துறை சார்பாக கோவையில் பல்வேறு இடங்களில் சிறப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின்போது கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 3 வாலிபர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா 4 செல்போன் 2 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை கைது செய்ததுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
‘‘கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அறிவுறுத்தலின்படி, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட மஹாதேவபுரம் அருகே தனிப்படை உதவி ஆய்வாளர் திலக் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த தீபக் ராஜ், முகமது பிலால் மற்றும் தீனதயாளன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 3 கிலோ கிராம் கஞ்சா, செல்போன்கள்-4, இருசக்கர வாகனம்-2 மற்றும் ரூபாய் 4000/- பறிமுதல் செய்தார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை *7708100100* என்ற *வாட்ஸ்அப் எண்ணிற்கு* தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
கோவையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபர்களை கைது செய்ததுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
‘‘கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அறிவுறுத்தலின்படி, மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்குட்பட்ட மஹாதேவபுரம் அருகே தனிப்படை உதவி ஆய்வாளர் திலக் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த தீபக் ராஜ், முகமது பிலால் மற்றும் தீனதயாளன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 3 கிலோ கிராம் கஞ்சா, செல்போன்கள்-4, இருசக்கர வாகனம்-2 மற்றும் ரூபாய் 4000/- பறிமுதல் செய்தார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை *7708100100* என்ற *வாட்ஸ்அப் எண்ணிற்கு* தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.