கோவை: வால்பாறையில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கரடி தாக்கி இறந்தவரின் உறவினர்கள் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: வால்பாறையில் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி கரடி தாக்கி இறந்தவரின் உறவினர்கள் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான கரடி, சிறுத்தை, புலி, யானை போன்ற வனவிலங்குகள் உள்ளன. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் மனித-வன உயிரின மோதல்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், நேற்று இரவு வில்லோனி LD பகுதியில் மோகன்ராஜ் என்ற தேயிலைத் தோட்ட தொழிலாளி வீட்டு அருகே கரடி தாக்கி உயிரிழந்தார். அவருடைய உடல் பிரேதப் பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்த ஆனைமலை புலிகள் காப்பக தலைமையிடத்து உதவி வனப்பாதுகாவலர் பிரசாந்த் மற்றும் உதவி வன பாதுகாவலர் செல்வம் ஆகியோரை மோகன்ராஜ் உறவினர்கள் முற்றுகையிட்டு வன விலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், இறந்து போனவரின் மனைவிக்கு அரசு வேலை வாய்ப்பு, குழந்தைகளின் கல்விச் செலவுக்கான ஏற்பாடுகள் செய்து தரும்படி வற்புறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, வால்பாறை நகர திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ.அமீது மற்றும் வனத்துறை அலுவலர்கள் அவர்களுடைய கோரிக்கையை அரசுக்கு தெரிவித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களுடன் சமாதானம் பேசினர். இதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் ஏராளமான கரடி, சிறுத்தை, புலி, யானை போன்ற வனவிலங்குகள் உள்ளன. இதன் காரணமாக வால்பாறை பகுதியில் மனித-வன உயிரின மோதல்கள் அடிக்கடி நடைபெறுவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், நேற்று இரவு வில்லோனி LD பகுதியில் மோகன்ராஜ் என்ற தேயிலைத் தோட்ட தொழிலாளி வீட்டு அருகே கரடி தாக்கி உயிரிழந்தார். அவருடைய உடல் பிரேதப் பரிசோதனைக்காக வால்பாறை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இன்று வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்த ஆனைமலை புலிகள் காப்பக தலைமையிடத்து உதவி வனப்பாதுகாவலர் பிரசாந்த் மற்றும் உதவி வன பாதுகாவலர் செல்வம் ஆகியோரை மோகன்ராஜ் உறவினர்கள் முற்றுகையிட்டு வன விலங்குகளிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும், இறந்து போனவரின் மனைவிக்கு அரசு வேலை வாய்ப்பு, குழந்தைகளின் கல்விச் செலவுக்கான ஏற்பாடுகள் செய்து தரும்படி வற்புறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, வால்பாறை நகர திமுக பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை வீ.அமீது மற்றும் வனத்துறை அலுவலர்கள் அவர்களுடைய கோரிக்கையை அரசுக்கு தெரிவித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களுடன் சமாதானம் பேசினர். இதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.