வால்பாறையில் கரடி தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

கோவை: வால்பாறையில் கரடி தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: வால்பாறையில் கரடி தாக்கி தேயிலைத் தோட்ட தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது வில்லோனி தேயிலைத் தோட்டம். இங்குள்ள எல்டி பிரிவை சேர்ந்தவர் குழந்தை வேலு என்பவரின் மகன் மோகன்ராஜ் (36). இவர் இங்குள்ள தேயிலைத் தொழிற்சாலையில் உதவி மின் பணியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்று இரவு இவர் தனது வீட்டு அருகில் சென்று கொண்டிருந்த பொழுது பக்கத்தில் புதரில் மறைந்திருந்த கரடி அவரை தாக்கியது. மோகன் ராஜன் அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே, கரடி அவரை விட்டு விட்டு தப்பி ஓடியது.



இதையடுத்து, பலத்த காயமடைந்த மோகன்ராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இறந்துபோன மோகன்ராஜுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 7 மற்றும் 9 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர்.

பின்னர், இது குறித்து தகவலறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன், காவல் ஆய்வாளர் மகேஸ்வரி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...