கோவை: வால்பாறையில் லாட்டரி விற்பனை செய்த இருவரைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
கோவை: வால்பாறையில் லாட்டரி விற்பனை செய்த இருவரைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் அண்டை மாநில லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவரின் உத்தரவிற்கிணங்க சிறப்புக் காவல்படை உதவி ஆய்வாளர் முரளி தலைமையில் தலைமைக்காவலர் சுரேஷ் மற்றும் காவல் துறையினர் அடங்கிய சிறப்புப்படையினர் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ரகசியமாகத் துப்பு துலக்கினர்.
வாடிக்கையாளர் போன்று அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு ஆன்லைன் மூலம் மூன்று மற்றும் நான்கு நம்பர் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருப்பதைப் பார்த்துச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆனந்த் மற்றும் செல்வம் ஆகிய இருவரையும் பிடித்து அவர்களிடமிருந்த ரூபாய் 5920 யையும் கைப்பற்றி வால்பாறை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இருவர் மீதும் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஷ்வரி வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் அண்டை மாநில லாட்டரி சீட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாகக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அவரின் உத்தரவிற்கிணங்க சிறப்புக் காவல்படை உதவி ஆய்வாளர் முரளி தலைமையில் தலைமைக்காவலர் சுரேஷ் மற்றும் காவல் துறையினர் அடங்கிய சிறப்புப்படையினர் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ரகசியமாகத் துப்பு துலக்கினர்.
வாடிக்கையாளர் போன்று அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு ஆன்லைன் மூலம் மூன்று மற்றும் நான்கு நம்பர் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருப்பதைப் பார்த்துச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த ஆனந்த் மற்றும் செல்வம் ஆகிய இருவரையும் பிடித்து அவர்களிடமிருந்த ரூபாய் 5920 யையும் கைப்பற்றி வால்பாறை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இருவர் மீதும் வால்பாறை காவல் ஆய்வாளர் மகேஷ்வரி வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.