கோவையில் வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் உடன் கோவை மாநகர காவல் கண்காணிப்பு துணை ஆணையர் செந்தில்குமார் ஆலோசனை

கோவை: கோவையில் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், டெம்போ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், ஆட்டோ டிரைவர்கள் கால்டாக்சி டிரைவர்கள் உட்பட அனைவரையும் அழைத்து கோவை மாநகர காவல்துறை சார்பில் சாலை வார விழாவையொட்டி விபத்துகளைத் தவிர்ப்பது குறித்தும் நெரிசலை தவிர்ப்பது குறித்தும் சாலை விதிகளை மதிப்பது குறித்தும் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், டெம்போ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், ஆட்டோ டிரைவர்கள் கால்டாக்சி டிரைவர்கள் உட்பட அனைவரையும் அழைத்து கோவை மாநகர காவல்துறை சார்பில் சாலை வார விழாவையொட்டி விபத்துகளைத் தவிர்ப்பது குறித்தும் நெரிசலை தவிர்ப்பது குறித்தும் சாலை விதிகளை மதிப்பது குறித்தும் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் வைத்து சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு டிரைவர்கள் மட்டும் காவல் துறையினர் கலந்துகொண்ட ஆலோசனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இதற்கு போக்குவரத்து துணை ஆணையர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் லாரி, கால் டாக்ஸி, ஆட்டோ, அதனுடைய சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வட்டார போக்குவரத்து ஆர்.டி.ஓ-க்கள் பாஸ்கரன், சரவணன், குமரவேல், சிவகுருநாதன் உட்பட நான்கு வட்டார அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



அப்பொழுது கோவை மாநகரில் மேம்பாலங்கள் வேலை நடைபெறுவதால் போலீஸார் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை மீறி செல்வதால் பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் சாலை விதிகளை மதித்து நடக்கும் படி அறிவுறுத்தப்பட்டது. ஓவர் ஸ்பீடாக செல்லக்கூடிய வாகனங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மினி லாரி ஓட்டுநர்கள் அதிகாலையில் காய்கறி மற்றும் லோடுகள் ஏற்றிச் செல்லும் பொழுது ஓவர் ஸ்பீடாக செல்லக்கூடாது என கூறப்பட்டது. ஆட்டோ டிரைவர் கூட்ட நெரிசலை கவனத்தில் கொண்டு சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.



அதேபோல, சாலை மேம்பாலங்கள் வேலை நடைபெறுவதால் அனைவரும் அனைத்து ஓட்டுநர்களும் காவல்துறைக்கு சாலை விதிகளை மதித்து போக்குவரத்து நெரிசலை மனதில் கொண்டு மதித்து நடக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அதேபோல ஓட்டுநர்களும் எங்கள் மீது கட்டாயமாக அபராதம் விதிக்கப்படுவதாகக் குறை கூறினர். போலீஸ் மற்றும் ஓட்டுநர்கள் நல்லுறவு தொடர்ந்து பேணிப் பாதுகாக்கப்படும் என அதற்காக இருவரும் ஒத்துழைக்க வேண்டும் என உறுதியளிக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...