கோவை: கிணத்துக்கடவு அருகே மன்றாம் பாளையத்தில் வருவாய்த் துறை நடவடிக்கையால் அரசுக்குச் சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.
கோவை: கிணத்துக்கடவு அருகே மன்றாம் பாளையத்தில் வருவாய்த் துறை நடவடிக்கையால் அரசுக்குச் சொந்தமான நிலம் மீட்கப்பட்டது.
கிணத்துக்கடவு அருகே உள்ள மன்றாம் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அரசுக்குச் சொந்தமான இடத்தை தனியார் ஒருவர் செடிகள், தண்ணீர் குழாய் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி மன்றாம் பாளையம் பொதுமக்கள் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகாவிடம் மனுகொடுத்தனர்.
இதனையடுத்து கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு செய்த நபரிடம் 7-நாட்களுக்குள் அகற்றி கொள்ளுமாறு அவகாசம் வழங்கப்பட்டு வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அந்த நபர் அரசுக்குச் சொந்தமான இடத்தை காலி செய்யாமல் பயன்படுத்தி வந்ததால் இன்று அதிரடியாக மன்றாம்பாளையத்திற்க்கு சென்ற கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா தலைமையில் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் முன்னிலையில் தனியார் ஆக்கிரமித்து வைத்திருந்தஒரு சென்ட் நிலத்தை புல்டோசர் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிணத்துக்கடவு அருகே உள்ள மன்றாம் பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அரசுக்குச் சொந்தமான இடத்தை தனியார் ஒருவர் செடிகள், தண்ணீர் குழாய் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி மன்றாம் பாளையம் பொதுமக்கள் கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகாவிடம் மனுகொடுத்தனர்.
இதனையடுத்து கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு செய்த நபரிடம் 7-நாட்களுக்குள் அகற்றி கொள்ளுமாறு அவகாசம் வழங்கப்பட்டு வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அந்த நபர் அரசுக்குச் சொந்தமான இடத்தை காலி செய்யாமல் பயன்படுத்தி வந்ததால் இன்று அதிரடியாக மன்றாம்பாளையத்திற்க்கு சென்ற கிணத்துக்கடவு தாசில்தார் சசிரேகா தலைமையில் வருவாய்த் துறையினர், பொதுமக்கள் முன்னிலையில் தனியார் ஆக்கிரமித்து வைத்திருந்தஒரு சென்ட் நிலத்தை புல்டோசர் எந்திரம் மூலம் அகற்றப்பட்டு அரசு நிலம் மீட்கப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.