கோவை: கள்ளச்சந்தையில் குட்கா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி டி.எஸ்.பி தமிழ்மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: கள்ளச்சந்தையில் குட்கா விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சி டி.எஸ்.பி தமிழ்மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கள்ளச்சந்தையில் குட்கா விற்பனை செய்வதைத் தடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள, குடோன்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் காவல்துறை தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், செயல்பட்டு வரும் கடை உரிமையாளர்கள் மற்றும் குடோன் உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ்மணி உத்தரவிட்டார்.
இதையடுத்து, பொள்ளாச்சி சரகத்திற்கு உட்பட்ட கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், நெகமம் காவல் நிலையம், தாலுக்கா காவல் நிலையம் உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற கடை உரிமையாளர்களிடம், குட்கா பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினார்.

மேலும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தால், குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், உள்ளாட்சி நிர்வாகம் மூலம் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ்மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கள்ளச்சந்தையில் குட்கா விற்பனை செய்வதைத் தடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள, குடோன்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் காவல்துறை தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சியில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், செயல்பட்டு வரும் கடை உரிமையாளர்கள் மற்றும் குடோன் உரிமையாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ்மணி உத்தரவிட்டார்.
இதையடுத்து, பொள்ளாச்சி சரகத்திற்கு உட்பட்ட கிழக்கு காவல் நிலையம், மேற்கு காவல் நிலையம், நெகமம் காவல் நிலையம், தாலுக்கா காவல் நிலையம் உள்ளிட்ட அனைத்து காவல் நிலையங்களிலும், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற கடை உரிமையாளர்களிடம், குட்கா பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினார்.
மேலும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தால், குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், உள்ளாட்சி நிர்வாகம் மூலம் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ்மணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.