கிணத்துக்கடவில் காரை வாங்கி பணம் தராமல் ஏமாற்றிய இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு..!

கோவை: கிணத்துக்கடவில் 3.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை வாங்கி பணம் தராமல் ஏமாற்றிய இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவில் 3.75 லட்சம் ரூபாய் மதிப்பிலான காரை வாங்கி பணம் தராமல் ஏமாற்றிய இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் வசிப்பவர் அசோக்குமார்(60) இவருக்கு சொந்தமான இனோவா காரை கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொள்ளாச்சி நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், வேட்டைக்காரன் புதூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் ஆகியோருக்கு 3.75 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதாக ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், செந்தில்குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரும் கார் உரிமையாளர் அசோக்குமாரிடம் முன்பணமாக 50 ஆயிரம் பணம் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை 15 நாட்களில் தருவதாகக் கூறி காரை எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது.

பதினைந்து நாட்கள் மேல் ஆகியும் காரை எடுத்துச் சென்றவர்கள் பணம் தராததால், இருவரையும் தொடர்பு கொண்டு கார் உரிமையாளர் அசோக்குமார் பணம் கேட்டு வந்துள்ளார். ஆனால், இருவரும் பணம் தராமல் அசோக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

இதனால், காரைக் கொடுத்து ஏமாற்றமடைந்த அசோக்குமார் இன்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காரை வாங்கியதற்க்கான 3.25 லட்சம் ரூபாய் பணம் தராமல் ஏமாற்றியதாகவும், பணத்தை கேட்டவர் மீது கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி செந்தில்குமார் மற்றும் சக்திவேல் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...