வால்பாறை புது மார்க்கெட் பகுதியில் பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!

கோவை: வால்பாறை புது மார்க்கெட் பகுதியில் பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறை புது மார்க்கெட் பகுதியில் பூட்டிக்கிடக்கும் கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் மத்திய பகுதியில் அமைந்துள்ளது புது மார்க்கெட். இப்பகுதியில் சிறிய பெரிய என சுமார் 1,000 கடைகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் இந்த கழிவறையை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளும் இந்த கழிவறையை பயன்படுத்தி வருகின்றனர்.



இந்த கழிப்பறை நகராட்சியால் கட்டப்பட்டு குத்தகை அடிப்படையில் ஒப்பந்ததாரரால் பராமரிக்கப் பட்டு வந்தது. தற்போது சில மாதங்களாக இந்த கழிப்பறை பூட்டப்பட்டு கிடக்கிறது.

இதன் காரணமாக இப்பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்கள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அதிகாலையில் வெளியூரிலிருந்து பேருந்தில் வரும் பயணிகள் கழிப்பறை வசதி இல்லாமல் பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

எனவே, நகராட்சி நிர்வாகம் இந்த கழிப்பறையை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கழிப்பறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...