கோவை: பொள்ளாச்சி சங்கம் பாளையம் காலனியில், உள்ள மேம்பாலத்தில் விபத்தால் அடிக்கடி ஏற்படும் உயிர்ப் பலியால், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: பொள்ளாச்சி சங்கம் பாளையம் காலனியில், உள்ள மேம்பாலத்தில் விபத்தால் அடிக்கடி ஏற்படும் உயிர்ப் பலியால், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆட்சி பட்டி ஊராட்சியில் சங்கம் பாளையம் - நடுப்புணி சாலையிலுள்ள மேம்பாலம் கடந்த 5-ஆண்டுகளுக்குமுன்பு கட்டி முடிக்கப்பட்டது.

ஆனால், மேம்பாலத்தில் தடுப்புச் சுவர், ஒளிர் விளக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர்.

மேம்பாலத்திலிருந்து 50-அடிக்குக் கீழே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து பலர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், இன்று அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவிடம்மனு அளித்தனர்.
மேம்பாலத்தில் தடுப்புச் சுவர், மின் விளக்குகள், உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் தொடர்ந்து இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து உயிர்ச் சேதங்கள் ஏற்படுவதோடு வாகனங்கள் குடியிருப்புகள் மீது விழுகின்றன.
இதனால் அப்பகுதியில் குடியிருக்கவே அச்சமாக உள்ளது. எனவே மேம்பாலத்தில் விபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொள்ளாச்சியை அடுத்த ஆட்சி பட்டி ஊராட்சியில் சங்கம் பாளையம் - நடுப்புணி சாலையிலுள்ள மேம்பாலம் கடந்த 5-ஆண்டுகளுக்குமுன்பு கட்டி முடிக்கப்பட்டது.
ஆனால், மேம்பாலத்தில் தடுப்புச் சுவர், ஒளிர் விளக்குகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றனர்.
மேம்பாலத்திலிருந்து 50-அடிக்குக் கீழே உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து பலர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், இன்று அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவிடம்மனு அளித்தனர்.
மேம்பாலத்தில் தடுப்புச் சுவர், மின் விளக்குகள், உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாததால் தொடர்ந்து இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து உயிர்ச் சேதங்கள் ஏற்படுவதோடு வாகனங்கள் குடியிருப்புகள் மீது விழுகின்றன.
இதனால் அப்பகுதியில் குடியிருக்கவே அச்சமாக உள்ளது. எனவே மேம்பாலத்தில் விபத்துகள் ஏற்படாதவாறு பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.