வால்பாறையில் சோலையார் அணை நிரம்பியதை அடுத்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!

கோவை: வால்பாறையில் உள்ள சோலையார் அணை நிரம்பியதை அடுத்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.


கோவை: வால்பாறையில் உள்ள சோலையார் அணை நிரம்பியதை அடுத்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து சோலையார் அணை நிரம்பியது. கொரோனா தொற்று பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து இருந்த காரணத்தால் வால்பாறை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசு சில தினங்களுக்கு முன் மீண்டும் பொது போக்குவரத்தை துவங்கியது. சுற்றுலா இடங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் செல்ல அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, வால்பாறைக்கு சுற்றுலா பயணிகள் வர துவங்கினர்.



இந்த நிலையில், சோலையார் அணை நிரம்பி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதை அறிந்து பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் சோலையார் அணை பகுதிக்கு வந்து அணையை கண்டு மகிழ்ந்தனர்.

மேலும், ஆபத்தை உணராமல் ஆர்ப்பரித்து வரும் தண்ணீர் முன் நின்று குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர். காவல் துறையினர் பாதுகாப்பு அளிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...