கோவை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை... மாவட்ட கண்காணிப்பாளர் உறுதி..!

கோவை: கோவை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உறுதி கூறியுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உறுதி கூறியுள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது.



மாவட்டம் முழுவதும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் நடவடிக்கையாக 'விழித்திரு' என்ற தலைப்பில் கிராமங்கள் தோறும் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டியில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

பின்னர், செய்தியாளர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அளித்த பேட்டியின்போது, 'ஊரடங்கு காலத்தில் பெண் குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பதால் குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்க பெற்றோர்களின் கண்காணிப்பு அவசியம்.



மேலும், கோவை மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இரண்டு மாத காலத்திற்குள் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களை சந்தித்து பெண் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கவும், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...