கோவை: வால்பாறையில் நேற்று நிறுவை செட் இடிந்து விழுந்து காயமடைந்த தொழிலாளர்களைச் துணை ஆட்சியர் நலம் விசாரித்தார்.
கோவை: வால்பாறையில் நேற்று நிறுவை செட் இடிந்து விழுந்து காயமடைந்த தொழிலாளர்களைச் துணை ஆட்சியர் நலம் விசாரித்தார்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மானிக்கா எஸ்டேட் என்.சி.பகுதியில் தேயிலை இலைகளை நிறுவை செய்து கொண்டிருந்த போது நிறுவை களத்தின் மேற்கூரை திடீரென உடைந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளர்கள் ரெஜிதா, சாந்தி, பேபி, சுஜாதா, எமிமா ஆகியோர்கள் ஸ்டான்மோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், வால்பாறை பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வந்திருந்த பொள்ளாச்சி துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், வால்பாறை வட்டாட்சியர் ராஜன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அமிர்த ராஜ் ஆகியோர் முன்னிலையில் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.

இதனால் துணை ஆட்சியரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்குத் தொழிலாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள மானிக்கா எஸ்டேட் என்.சி.பகுதியில் தேயிலை இலைகளை நிறுவை செய்து கொண்டிருந்த போது நிறுவை களத்தின் மேற்கூரை திடீரென உடைந்து விழுந்ததில் காயமடைந்த தொழிலாளர்கள் ரெஜிதா, சாந்தி, பேபி, சுஜாதா, எமிமா ஆகியோர்கள் ஸ்டான்மோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வந்திருந்த பொள்ளாச்சி துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், வால்பாறை வட்டாட்சியர் ராஜன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அமிர்த ராஜ் ஆகியோர் முன்னிலையில் மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்த தொழிலாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கி ஆறுதல் கூறினார்.
இதனால் துணை ஆட்சியரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்குத் தொழிலாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.