பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு... பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்... கிணத்துக்கடவு போலீஸார் வலியுறுத்தல்..!

கோவை: நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதால் பெண் பிள்ளைகளைப் பெற்றோர்கள் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என கிணத்துக்கடவு போலீஸார் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.


கோவை: நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதால் பெண் பிள்ளைகளைப் பெற்றோர்கள் கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என கிணத்துக்கடவு போலீஸார் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் பெற்றோர்கள் மற்றும் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கோவை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரண்டு பெண் காவலர்களை நியமித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி கிணத்துக்கடவு காவல்துறையினர் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக இன்று கிணத்துக்கடவு பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள சமுதாயக் கூடத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



கிணத்துக்கடவு காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் கவிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் சேகர், சமூக ஆர்வலர் சக்தி சரண்யா, காவலர் பவதாரணி ஆகியோர் கலந்துகொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் பெண் குழந்தைகளைக் கண்காணித்து வளர்க்க வேண்டும் என்றும், பாலியல் ரீதியாகவோ, வரதட்சனை ரீதியாகவோ பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக 181 மற்றும் 10 9 8 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...