கோவையில் தனியாக இருந்த மூதாட்டியிடம் 11 பவுன் நகை பறிப்பு... மர்ம வாலிபர்கள் கைவரிசை..!

கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் முகமூடி அணிந்து வந்த மர்ம வாலிபர்கள் கதவைத் தட்டி 11 பவுன் நகையைப் பறித்துச் சென்று கைவரிசை காட்டியுள்ளனர்.


கோவை: கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் முகமூடி அணிந்து வந்த மர்ம வாலிபர்கள் கதவைத் தட்டி 11 பவுன் நகையைப் பறித்துச் சென்று கைவரிசை காட்டியுள்ளனர்.

கோவை போத்தனூரில் மூதாட்டியைத் தாக்கி 11 பவுன் நகையை பறித்துச் சென்ற முகமூடி அணிந்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- ‘‘கோவையை அடுத்த சூலூர் அருகே உள்ள என்.பி. இட்டேரி காசி நகரைச் சேர்ந்தவர் பகுருதீன் 75, இவருடைய மனைவி ஜகாரா 66, இவர்களுக்கு நான்கு மகன்கள் 4 மகன்கள் உள்ளனர். அனைவரும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் பகுருதீன் ஜகாரா தனியாக வசித்து வந்தனர்.

அவர்கள் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 3 மணி அளவில் அவர்கள் வீட்டின் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. உடனே எழுந்து கதவைத் திறந்தார். அப்போது வீட்டின் வாசலில் முகமூடி அணிந்தபடி 2 வாலிபர்கள் நின்றனர். அவர்கள் திடீரென ஜகாராவைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். அப்பகுதியில் உள்ள அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மர்ம நபர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்தப் புகாரின் பேரில் போத்தனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நகையைப் பறித்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...