கோவை: கோவை, வடவள்ளி, கருப்பராயன் வீதியில் வசித்து வந்த 40 வயதுடைய பெண் தூய்மை பணியாளரின் பிணம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவை, வடவள்ளி, கருப்பராயன் வீதியில் வசித்து வந்த 40 வயதுடைய பெண் தூய்மை பணியாளரின் பிணம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது, அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நித்யா (40) என்ற பெண் கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கணவனை இழந்து அவர், அவரது உறவினரான செந்தில்குமார் என்பவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் நித்யா உடைய செல்போனுக்கு அவருடைய சகோதரர் அழைத்து போது, அவர் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டை திறந்து பார்த்த போது, அழுகிய நிலையில் நித்யா சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து, தகவல் அறிந்த வடவள்ளி போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், கடந்த 21ஆம் தேதி செந்தில்குமார், உக்கடம் காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு இறந்து போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆதலால், செந்தில்குமாரின் இறப்புக்கும் நித்யாவின் சாவுக்கும் தொடர்பு உள்ளதா ? என்று பல்வேறு கோணத்தில் வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நித்யா (40) என்ற பெண் கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். கணவனை இழந்து அவர், அவரது உறவினரான செந்தில்குமார் என்பவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் நித்யா உடைய செல்போனுக்கு அவருடைய சகோதரர் அழைத்து போது, அவர் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து அவர் வீட்டுக்கு வந்துள்ளார்.
பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டை திறந்து பார்த்த போது, அழுகிய நிலையில் நித்யா சடலமாகக் கிடந்துள்ளார். இதுகுறித்து, தகவல் அறிந்த வடவள்ளி போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், கடந்த 21ஆம் தேதி செந்தில்குமார், உக்கடம் காவல் நிலையத்திற்கு எல்லைக்குட்பட்ட பகுதியில் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு இறந்து போனதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆதலால், செந்தில்குமாரின் இறப்புக்கும் நித்யாவின் சாவுக்கும் தொடர்பு உள்ளதா ? என்று பல்வேறு கோணத்தில் வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.