கோவை: பொள்ளாச்சி அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை கட்டித் தரக்கோரி அனைத்துக் கட்சியினர் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே கடந்த 2019-ஆம் ஆண்டு மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளை கட்டித் தரக்கோரி அனைத்துக் கட்சியினர் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வால்பாறை பகுதியில் பெய்த கன மனழ காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் கல்லார்குடி காடர் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல், சின்னக்கல்லார் பகுதியிலுள்ள குடியிருப்புகளும் சேதமடைந்தன. இதனையடுத்து, குடிசைகளை அகற்றிய வனத்துறையினர் 23 குடும்பங்களை தாய்முடி தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் தங்க வைத்துள்ளனர்.

தற்போது, ஓர் ஆண்டுக்கு மேலாக மாற்று இடம் கிடைக்காமல் தற்காலிகக் குடியிருப்பில் வசிக்கின்றனர். கல்லார்குடி கிராமத்தில் மழைக்காலத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், தெப்பக்குளமேடு பகுதியில் மாற்று இடம் கேட்டு பழங்குடியின மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால், இன்று பொள்ளாச்சியில் உள்ள மதிமுக, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

கல்லார் குடியிருப்பு பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்க தேசிய புலிகள் ஆணையத்திற்கு கருத்துரு அனுப்பி உள்ளதாகவும் அதுகுறித்து பதில் கிடைத்ததும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வால்பாறை பகுதியில் பெய்த கன மனழ காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் கல்லார்குடி காடர் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேபோல், சின்னக்கல்லார் பகுதியிலுள்ள குடியிருப்புகளும் சேதமடைந்தன. இதனையடுத்து, குடிசைகளை அகற்றிய வனத்துறையினர் 23 குடும்பங்களை தாய்முடி தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடியிருப்பில் தங்க வைத்துள்ளனர்.
தற்போது, ஓர் ஆண்டுக்கு மேலாக மாற்று இடம் கிடைக்காமல் தற்காலிகக் குடியிருப்பில் வசிக்கின்றனர். கல்லார்குடி கிராமத்தில் மழைக்காலத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், தெப்பக்குளமேடு பகுதியில் மாற்று இடம் கேட்டு பழங்குடியின மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்காததால், இன்று பொள்ளாச்சியில் உள்ள மதிமுக, கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
கல்லார் குடியிருப்பு பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்க தேசிய புலிகள் ஆணையத்திற்கு கருத்துரு அனுப்பி உள்ளதாகவும் அதுகுறித்து பதில் கிடைத்ததும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.