கோவை: பொள்ளாச்சியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கோவை: பொள்ளாச்சியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த கோயில்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இருப்பினும், கொரோனா வைரஸ் அச்சம் காராணமாக பெரும்பாலான கோயில்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

இந்த நிலையில், இன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோயில் மேலும் ஆனைமலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற மாசாணியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் இன்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

கோயில் நுழைவாயிலில் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் சனிடைசர் தெளித்து கைகளை சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அதேசமயம், அர்ச்சனை நடைபெறவில்லை.
கொரோனா காலத்தில் கோயில்கள் திறக்கப்படாததால் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை இருந்தது. இன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மனை வழிபடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக பெண்கள் தெரிவித்தனர்.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்த கோயில்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இருப்பினும், கொரோனா வைரஸ் அச்சம் காராணமாக பெரும்பாலான கோயில்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.
இந்த நிலையில், இன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் கோவில்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோயில் மேலும் ஆனைமலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற மாசாணியம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் இன்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கோயில் நுழைவாயிலில் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மற்றும் சனிடைசர் தெளித்து கைகளை சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அதேசமயம், அர்ச்சனை நடைபெறவில்லை.
கொரோனா காலத்தில் கோயில்கள் திறக்கப்படாததால் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை இருந்தது. இன்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் அம்மனை வழிபடுவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக பெண்கள் தெரிவித்தனர்.