கோவை கிணத்துக்கடவில் கொட்டும் மழையிலும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்ட பொதுமக்கள்..!

கோவை: கோவை கிணத்துக்கடவில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் கொட்டும் மழையிலும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் கொட்டும் மழையிலும் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று செட்டிக்காபாளையம், காட்டம்பட்டி, கிணத்துக்கடவு நகரம், சிங்கையன்புதூர் ஆகிய 4 இடங்களில் தடுப்பு முகாம் நடத்தி ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

தடுப்பூசி போடப்படும் தகவல் பொதுமக்களுக்கு இன்று காலை கொடுக்கப்பட்டதால் அனைத்து மையங்களிலும் மக்கள் அதிகளவில் கூடினர்.

முன்னதாக, முதலில் வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர், டோக்கன் பெற்றுக் கொண்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.



கிணத்துக்கடவில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வந்தாலும், கொட்டும் மழையும் பாராமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

மேலும், அதிகளவில் மக்கள் கூடியதால் கொரோனா தடுப்பூசிக்கான டோக்கன்களை கேட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...