கோவை: போத்தனூர் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி இடையே ரயில்வே மின்மயமாக்கல் பணிகளை முதன்மை பொறியாளர் ஆய்வு செய்தார்.
கோவை: போத்தனூர் - கிணத்துக்கடவு - பொள்ளாச்சி இடையே ரயில்வே மின்மயமாக்கல் பணிகளை முதன்மை பொறியாளர் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் போத்தனூர்- கிணத்துக்கடவு- பொள்ளாச்சி இடையே உள்ள அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி, தற்போது வரை 80 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது.

இந்நிலையில், இன்று தென்னக ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு முதன்மை பொறியாளர் சுனில் மற்றும் சேலம் மற்றும் பாலக்காடு கோட்ட சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் மின்மயமாக்கல் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, போத்தனூரில் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி வரை உள்ள ரயில்வே கிராசிங் மற்றும் ரயில் நிலையங்களில் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

தற்போது நடத்தப்படும் ஆய்வின் அறிக்கையை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு சமர்ப்பிக்கப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் போது போத்தனூர் ரயில் நிலைய டிவிஷன் அதிகாரிகள் தமிழ்ச்செல்வன், மாஜி, ஹாஜி உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் போத்தனூர்- கிணத்துக்கடவு- பொள்ளாச்சி இடையே உள்ள அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணி கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி, தற்போது வரை 80 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது.
இந்நிலையில், இன்று தென்னக ரயில்வே சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு முதன்மை பொறியாளர் சுனில் மற்றும் சேலம் மற்றும் பாலக்காடு கோட்ட சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் மின்மயமாக்கல் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, போத்தனூரில் இருந்து கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி வரை உள்ள ரயில்வே கிராசிங் மற்றும் ரயில் நிலையங்களில் சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
தற்போது நடத்தப்படும் ஆய்வின் அறிக்கையை தென்னக ரயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு சமர்ப்பிக்கப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் மின்சார ரயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக ரயில்வே துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் போது போத்தனூர் ரயில் நிலைய டிவிஷன் அதிகாரிகள் தமிழ்ச்செல்வன், மாஜி, ஹாஜி உள்ளிட்ட ரயில்வே துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.