கோவை: வால்பாறை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 150 அடியை தாண்டியது.
கோவை: வால்பாறை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் 150 அடியை தாண்டியது.
கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பி குளம் ஆழியாறு திட்டத்தின் பிரதான அணையான சோலையார் அணை உள்ளது. கடந்த இரண்டு வார காலமாக தென்மேற்கு பருவமழை காரணமாக வால்பாறை பகுதியில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, சோலையார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேல் நீரார் அணை மற்றும் கீழ் நீரார் அணை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சோலையார் அணை கடந்த ஒரு வார காலமாக தினசரி 5 அடி உயர்ந்து, இன்று காலையில் 152 அடியாக உள்ளது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி மேல் நீரார் அணையில் 45 மி. மீட்டர் மழையும், கீழ் நீரார் அணையில் 27.மி.மீ.மழையும், சோலையார் அணை பகுதியில் 30 மி.மீ மழையும், வால்பாறை நகரில் 31 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
சோலையார் அணைக்கு 2258.70 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து மின் உற்பத்திக்காக பவர்ஹவுஸ் - 1-- ஒன்றுக்கு 398.38 கனஅடி நீரும், பவர் ஹவுஸ் 2-க்கு 167.59 கன அடி நீர் என மொத்தம் 565.97 கன அடி நீர்வெளியேற்றப்படுகிறது.
மேலும், 165 அடி உயரமுள்ள அணையில்நீர்மட்டம் 152.59 அடியாக உள்ளது. சோலையார் அணையின் நீர்வரத்து பகுதியான கூழாங்கல் ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வால்பாறை பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சோலையார் அணைவிரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப்பணித் துறையினர் அணையை கண்காணித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பி குளம் ஆழியாறு திட்டத்தின் பிரதான அணையான சோலையார் அணை உள்ளது. கடந்த இரண்டு வார காலமாக தென்மேற்கு பருவமழை காரணமாக வால்பாறை பகுதியில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, சோலையார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேல் நீரார் அணை மற்றும் கீழ் நீரார் அணை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சோலையார் அணை கடந்த ஒரு வார காலமாக தினசரி 5 அடி உயர்ந்து, இன்று காலையில் 152 அடியாக உள்ளது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி மேல் நீரார் அணையில் 45 மி. மீட்டர் மழையும், கீழ் நீரார் அணையில் 27.மி.மீ.மழையும், சோலையார் அணை பகுதியில் 30 மி.மீ மழையும், வால்பாறை நகரில் 31 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
சோலையார் அணைக்கு 2258.70 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து மின் உற்பத்திக்காக பவர்ஹவுஸ் - 1-- ஒன்றுக்கு 398.38 கனஅடி நீரும், பவர் ஹவுஸ் 2-க்கு 167.59 கன அடி நீர் என மொத்தம் 565.97 கன அடி நீர்வெளியேற்றப்படுகிறது.
மேலும், 165 அடி உயரமுள்ள அணையில்நீர்மட்டம் 152.59 அடியாக உள்ளது. சோலையார் அணையின் நீர்வரத்து பகுதியான கூழாங்கல் ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வால்பாறை பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் சோலையார் அணைவிரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப்பணித் துறையினர் அணையை கண்காணித்து வருகின்றனர்.