கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளுக்கு 1.52 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் அதிக பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளுக்கு 1.52 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு பகுதியில் அரசு அனுமதி வழங்கியதை விட கூடுதலாக கற்களை ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனை சாவடியில் காவல்துறையினர் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று அதிக லோடு ஏற்றி வந்த 5 டிப்பர் லாரிகளுக்கு அபராதம் விதித்த நிலையில், இன்றும் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக அரசு அனுமதி வழங்கியதை விட கூடுதலாக கற்களை ஏற்றிச் சென்ற 5 டிப்பர் லாரிகளுக்கு ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதிக கற்கள் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதிக்கப்பட்டு வரும் சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் டிப்பர் லாரி உரிமையாளர்களுக்கு இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு பகுதியில் அரசு அனுமதி வழங்கியதை விட கூடுதலாக கற்களை ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த இரண்டு நாட்களாக கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்பகவுண்டனூர் காவல்துறை சோதனை சாவடியில் காவல்துறையினர் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று அதிக லோடு ஏற்றி வந்த 5 டிப்பர் லாரிகளுக்கு அபராதம் விதித்த நிலையில், இன்றும் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக அரசு அனுமதி வழங்கியதை விட கூடுதலாக கற்களை ஏற்றிச் சென்ற 5 டிப்பர் லாரிகளுக்கு ஒரு லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதிக கற்கள் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதிக்கப்பட்டு வரும் சம்பவம் கிணத்துக்கடவு பகுதியில் டிப்பர் லாரி உரிமையாளர்களுக்கு இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.