கோவை: தொண்டாமுத்தூர் பகுதியில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பெயின்டிங் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: தொண்டாமுத்தூர் பகுதியில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த பெயின்டிங் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை தொண்டாமுத்தூரைச் சேர்ந்த16-வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.தற்போது பள்ளி விடுமுறை என்பதால் ஆலந்துறையில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளியான கார்த்திக் 21 என்பவரும் இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கடைக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆலந்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மாயமான சிறுமியை போலீசார் தேடி வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் சிறுமியை கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், பன்னிமடையில் இருப்பதாக தகவல் வரவே போலீசார் அங்கு சென்று சிறுமியையும், கார்த்தியையும்,ஆலந்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது கார்த்திக் சிறுமியை கடத்திச்சென்று பன்னிமடையில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.
கோவை தொண்டாமுத்தூரைச் சேர்ந்த16-வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.தற்போது பள்ளி விடுமுறை என்பதால் ஆலந்துறையில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
சிறுமியும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளியான கார்த்திக் 21 என்பவரும் இரண்டு வருடங்களாகக் காதலித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 18-ஆம் தேதி வேலைக்கு சென்ற சிறுமி இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கடைக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆலந்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், மாயமான சிறுமியை போலீசார் தேடி வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் சிறுமியை கடத்தி சென்று இருப்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து இவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், பன்னிமடையில் இருப்பதாக தகவல் வரவே போலீசார் அங்கு சென்று சிறுமியையும், கார்த்தியையும்,ஆலந்துறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு சிறுமியிடம் விசாரணை நடத்தியபோது கார்த்திக் சிறுமியை கடத்திச்சென்று பன்னிமடையில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.