கோவை: கோவையில் கள்ளக்காதலில் பெண்ணை தாக்கி, மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த உதவி காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல்துறை துணை ஆணையர் உத்தரவிட்டார்.
கோவை: கோவையில் கள்ளக்காதலில் பெண்ணை தாக்கி, மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த உதவி காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல்துறை துணை ஆணையர் உத்தரவிட்டார்.

கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பார்த்திபன் (55). இவருக்கும் கோவை சிங்காநல்லூர் வரதராஜ புரத்தைச் சேர்ந்த அபிநயா (40) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. அபிநயா கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடைய தந்தை உழவர் சந்தையில் வேலை செய்கிறார்.
இந்நிலையில், பார்த்திபன் அபிநயாவிற்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பார்த்திபன் அபிநயாவிற்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். சம்பவத்தன்று அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் அபிநயாவை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், உழவர் சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அபிநயாவின் தந்தை மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில், கோவை மாநகர சட்ட ஒழுங்கு காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனை நேற்று மாலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிபவர் பார்த்திபன் (55). இவருக்கும் கோவை சிங்காநல்லூர் வரதராஜ புரத்தைச் சேர்ந்த அபிநயா (40) என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. அபிநயா கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடைய தந்தை உழவர் சந்தையில் வேலை செய்கிறார்.
இந்நிலையில், பார்த்திபன் அபிநயாவிற்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் பார்த்திபன் அபிநயாவிற்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். சம்பவத்தன்று அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் அபிநயாவை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், உழவர் சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அபிநயாவின் தந்தை மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த நிலையில், கோவை மாநகர சட்ட ஒழுங்கு காவல் துணை ஆணையர் ஜெயச்சந்திரன் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபனை நேற்று மாலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.