கோவை கிணத்துக்கடவு காவல்துறை சார்பில் மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்!

கோவை: மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கிணத்துக்கடவு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.


கோவை: மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து கிணத்துக்கடவு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் 181 என்ற தொலைபேசி எண்ணை கோவை மாவட்ட காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், மகளிர் மற்றும் குழந்தை எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிணத்துக்கடவு பேரூராட்சி சமுதாய கூடத்தில் கிணத்துக்கடவு காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.



கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பெண் தலைமை காவலர் கவிதா, காவலர் பவதாரணி, சமூக ஆர்வலர் சக்தி சரண்யா ஆகியோர் கலந்துகொண்டு பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது, பாலியல் ரீதியாகவும், பெண்களுக்கு எதிரான குடும்ப பிரச்சனை, வரதட்சணை கொடுமை போன்ற சம்பவங்கள் அரங்கேறினால் காவல்துறையினர் அறிமுகப்படுத்திய 181 என்ற உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம் என்றும், மேலும் தற்போது ஆன்லைனில் வகுப்பு மூலம் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்து வருவதால் ஆன்லைன் வகுப்பு நடப்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...