கோவை: கோவையில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை: கோவையில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை காரமடை, சிக்கரம் பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அவர் உறவினர், விக்ரம் வயது 20 கட்டிட வேலை செய்து வந்துள்ளார். தொழிலாளி. இந்த நிலையில், சிறுமியிடம் நட்பாக பழகி வந்த விக்ரம், நாளைடைவில், அவரை காதலிப்பதாக கூறி உள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு அந்த மாணவி வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கிருந்த விக்ரம் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, விக்ரமிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு ஓடி வந்து அவரது தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் இது குறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து விசாரித்த போலீசார், குற்றத்தில் ஈடுபட்ட விக்ரமை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கோவை காரமடை, சிக்கரம் பாளையத்தை சேர்ந்த 15 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அவர் உறவினர், விக்ரம் வயது 20 கட்டிட வேலை செய்து வந்துள்ளார். தொழிலாளி. இந்த நிலையில், சிறுமியிடம் நட்பாக பழகி வந்த விக்ரம், நாளைடைவில், அவரை காதலிப்பதாக கூறி உள்ளார்.
இந்த நிலையில், நேற்று இரவு அந்த மாணவி வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கிருந்த விக்ரம் அந்த மாணவியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, விக்ரமிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு ஓடி வந்து அவரது தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் இது குறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் குறித்து விசாரித்த போலீசார், குற்றத்தில் ஈடுபட்ட விக்ரமை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.