கோவையில் தூய்மைப் பணியாளர் பணிக்கு நியமனம் பெற்று வேலைக்கு வராமல் இருப்பவர்களை வரக் கோரி சமூக நீதி கட்சியினர் தாம்பூல தட்டுகளுடன் மனு

கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் சமூக நீதி கட்சியின் மாநில தலைவர் பன்னீர்செல்வம், தூய்மைப் பணி நியமனம் பெற்று தூய்மைப் பணி செய்யாதவர்களை பணி செய்ய அனுப்பி வைக்குமாறு உதவி ஆணையாளரிடம் தாம்பூலத் தட்டுகளுடன் மனு அளித்தார்.



கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் சமூக நீதி கட்சியின் மாநில தலைவர் பன்னீர்செல்வம், தூய்மைப் பணி நியமனம் பெற்று தூய்மைப் பணி செய்யாதவர்களை பணி செய்ய அனுப்பி வைக்குமாறு உதவி ஆணையாளரிடம் தாம்பூலத் தட்டுகளுடன் மனு அளித்தார்.

கடந்த ஆண்டு கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணிக்கான வேலைக்கு பட்டதாரி இளைஞர்கள் உட்பட பலரும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் பலரும் தூய்மைப் பணியை செய்யாமல் அலுவலகப் பணியினை செய்து வருவதாக புகார்கள் எழுந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபடுத்தப் படுவதாகும் புகார்கள் எழுப்பப்பட்டது.



இந்தநிலையில், தூய்மைப் பணி நியமன ஆணையை பெற்றுக்கொண்டு தூய்மைப் பணி செய்யாதவர்களை வேலைக்கு அனுப்ப வலியுறுத்தி மத்திய மண்டல உதவி ஆணையாளரிடம் வெற்றிலை பாக்கு இனிப்புகளுடன் கூடிய தாம்பூலத் தட்டுடன் சென்று மனு அளித்தனர்.

இதுகுறித்து பேசிய அவர், ‘‘கடந்த ஆட்சியில் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருக்கும்பொழுது 549 பேர் தூய்மைப் பணிக்காக பணி நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், அவர்களின் 325 பேர் இன்று வரை ஒரு நாள் கூட தூய்மை வேலைக்கு வராமல் அலுவலக வேலை செய்து வருகின்றனர்'' என தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற்ற பட்டதாரிகள் இருந்தால் தூய்மைப் பணி செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்த அவர், இந்த 325 பேரும் தூய்மைப் பணி செய்யாமல் சம்பளம் வாங்கி வருவதாகத் தெரிவித்தார்.



இந்த செயலானது தூய்மைப் பணி என்பது ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் செய்கின்ற வேலை என்ற பிம்பத்தை கட்டமைப்பது போல் உள்ளது என தெரிவித்தார். எனவே, தூய்மைப் பணிக்காக நியமனம் பெற்றவர்களை தூய்மைப் பணிக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...