நீலகிரி அருகே முதுமலை வனப்பகுதியில் புலி தாக்கியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு!

நீலகிரி: நீலகிரி அருகே முதுமலை வனப்பகுதியில் புலி தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


நீலகிரி: நீலகிரி அருகே முதுமலை வனப்பகுதியில் புலி தாக்கியதில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் சில கிராமங்களில் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நேற்று மதியம் முதுமலை வனப்பகுதியில் உள்ள முதுகுழி கிராமத்தை சேர்ந்த விவசாயி குஞ்சுகிருஷ்ணன்(49) மளிகை பொருட்கள் வாங்க வனப்பகுதி வழியே சென்றுள்ளார்.

அப்போது, புதரில் பதுங்கியிருந்த புலி ஒன்று அவரது கழுத்தை கவ்வியுள்ளது. இதில், மூச்சு திணறி கிருஷ்ணன் அதே இடத்தில் இறந்தார். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.



இதையடுத்து, சரகர் தயாநந்தன், மருத்துவர் ராஜேஸ்குமார் உட்பட வனத் துறையினர் அந்த இடத்தை ஆய்வு செய்து, உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், தமிழக அரசு சார்பில் நிவாரண நிதியின் ஒரு பகுதியை இறந்த குஞ்சுகிருஷ்ணனின் உறவினர்களிடம் வழங்கினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...